தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் வியாழக்கிழமை பட்டாசு வெடித்து உயிரிழந்த 2 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாகதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கே.முனியம்மாள் (65), சேலத்தைச் சேர்ந்த பி.பழனியம்மாள் (50) ஆகிய இரு பெண்கள் வெடிவிபத்தில் உயிரிழந்தனர். இதில் பலத்த காயமடைந்த பி.சிவலிங்கம் (47) தருமபுரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நான்காவது நபரான சின்ன பொண்ணு வெடி விபத்து நடந்த அறைக்கு வெளியே சென்றதால் காயமின்றி உயிர் தப்பினார்.
பால் தட்டுப்பாடு: முதல்வருடன் பால்வளத்துறை அமைச்சர் நேரில் பேச்சுவார்த்தை
15 அடிக்கு 15 அடி கொண்ட பட்டாசு ஆலை ஆர்.சரவணன் என்பவருக்குச் சொந்தமானது , அதில் தொழிலாளர்கள் எரியக்கூடிய இரசாயனத்தை பயன்படுத்தி வேலை செய்த போது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.