பி. எப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு எவ்வளவு வட்டி அளிப்பது என சி.பி.டி எனப்படும் மத்திய அறங்காவலர் ஆணையம் நிர்ணயம் செய்யும்.
அந்த வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகான வட்டி விகித அறங்காவலர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மாத ஊதியம் பெறுவோர்களின் வட்டிவீதத்தை முடிவு செய்யும் பொருட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகான வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1% சதவீதமாக வட்டி குறைக்க முடிவு செய்யப்பட்டது. 2021- 22 ம் நிதி ஆண்டுக்கான பி.எப். வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் மாத ஊதியம் பெருவோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.