IPL 2022: சென்னையை பின்னுக்குத்தள்ள கொல்கத்தாவுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

நம் இந்தியாவில் தற்போது கோலாகலமாக 15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த அளவிற்கு ஜொலிக்கவில்லை என்றே கூறலாம்.

ஆடிய 11 ஆட்டங்களில் வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. முன்னதாக ஒன்பதாவது இடத்தில் பல நாட்களாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய ஆட்ட வெற்றியோடு 8-வது இடத்திற்கு தாவியது.

எட்டாவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா அணி முன்னேறுவதற்கு ஒரு வாய்ப்பாக இன்றைய தினம் அமைந்துள்ளது.

ஏனென்றால் இன்றைய ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 10வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் கொல்கத்தா அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றாலும்கூட 6 புள்ளிகளோடு 10வது இடத்தில் தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் இன்று இரவு 07:30 மணிக்கு மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...