பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டுமா? அப்படின்னா உடனடியாக இங்கு சென்று வழிபடுங்க…!

தோஷங்களிலேயே கொடிய தோஷம் பிரம்மஹத்தி தோஷம். அதாவது கொலை செய்ததால் உண்டாகும் பாவம். சிறு உயிர்களுக்குக்கூட தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கொலை என்றால் மனிதனை மட்டும் செய்வது கிடையாது.

எந்த ஒரு உயிரையும் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்தால் அதுவும் கொலை தானே. அதனால் இத்தகைய தோஷங்களால் நாம் நம்மையே அறியாமல் பீடிக்கப்பட்டு பல சித்ரவதைக்குள் ஆளாகி வருவோம். அந்தத் தோஷத்திலிருந்து முழுமையாக விடுபட நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கு, எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

Rameshwaram koil
Rameshwaram koil

ராமேஸ்வரம் கோவிலில் நிறைய பேர் அறிந்து கொள்ளவேண்டிய சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள் உள்ளன. கோவில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருபபோம்.

நீலேஸ்வரர் லிங்கம்

Moondram piraharam
Moondram piraharam

மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம். இந்த லிங்கத்தின் சிறப்பு என்னன்னா பல நூற்றாண்டுகளுகக்கு முன் சீதையால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் தான் இது என்கின்றனர். இந்த லிங்கத்தை தரிசிப்பதற்கு என பிராப்தம் இருக்க வேண்டும். அப்போது தான் தரிசிக்க முடியும்.

மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசயம். இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை உண்டு.

உப்பு லிங்கம்

Uppu lingam
Uppu lingam

ஒரு முறை சிலர், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.

அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.

அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார்.

அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம். மேலும் ராமேஸ்வரம் கோவிலில் அநேகம் பேருக்கு தெரியாத சேதுமாதவர் சன்னதி ஒன்று உள்ளது.

இளைஞனின் வடிவில் பெருமாள்

சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குழந்தை பாக்கியம் இல்லா குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

பிதுர்தோஷம்

கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷத்தை நீங்கும் என்பது எவருக்குமே தெரியாத தேவ ரகசியம்.

பாதாள பைரவர்

Pathala Bairavar
Pathala Bairavar

ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார்.

பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷம், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம், உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னிதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று தரிசித்து வந்தால் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews