
பொழுதுபோக்கு
புஷ்பா 2-வில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் தேசிய விருது வென்ற நடிகை! என்ன கேரக்டர் தெரியுமா?
தெலுங்கு மொழியில் கடந்த ஆண்டு வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா. இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார், ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியிருப்பார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படம் 17 டிசம்பர் 2021 தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போழுது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.
மேலும் நடிகர் விஜய் சேதுபதியிடம் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகும் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாகயுள்ளது. தற்போழுது இந்த படத்தில் ஸ்கிரிப்ட் பணி நடைபெற்று வருகிறது.
‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அவருக்கும் படத்தில் நெகடிவ் ரோல் தான் கொடுக்கப்பட்டுள்ளது.
சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் – படப்பிடிப்பில் இணைந்த ஹீரோயின்கள்!
தற்போழுது நடிகை பிரியாமணி இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ,நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
