திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் 30


fab855cf71ab2a0873505ea868b54abf

பாடல்

புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் 
 போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி 
சிவன் உய்யக் கொள்கின்றவாறு” என்று நோக்கித் 
 திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் 
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் 
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் 
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
 ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

 “இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது . அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக் கழித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும், பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,   
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும் அமுதமே ! பள்ளி எழுந்தருள்க!

திருச்சிற்றம்பலம்!

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் முற்றிற்று 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews