இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !! கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி..

இந்திய பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை கொண்ட நாடுதான் இந்தோனேசியா.

இந்தநாடு பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டின்  ஸ்லவைசி தீவின் கொடம்பகு பகுதியில் இருந்து  வடகிழக்கே 779 கிலோமீட்டர் தொலைவில் பசுபிக் பெருங்கடலில் இன்று காலை 6.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது . இந்த நிலநடுக்கம் இந்தோனேசிய நகரங்களில் அதிர்வை ஏற்படுத்தியதால் கட்டிடங்கள் அதிர்ந்தது.

அதே சமயம் நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.  மேலும் சுனாமி தொடர்பான எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவிலை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment