முருகனே நினைத்தால் தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்…! அருணகிரிநாதரை காப்பாற்றிய அதிசயம்..!

சிவன் கோவில்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகளவில் செல்வது முருகன் கோவில் தான். குன்று இருக்கும் இடம் தோறும் குமரன் குடியிருப்பான் என்று சொல்வார்கள்.

அதன் படி நாம் பல மலைகளில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்குச் சென்று தரிசித்திருப்போம். அந்த வகையில் இப்போதும் நாம் காண இருக்கும் கோவில் அப்படிப்பட்டது தான். பார்ப்போமா…

பூம்பாறை முருகன் கோவில் 

Bogar
Bogar

கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும். இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம். மிகவும் சக்திவாய்ந்த நவபாஷான முருகன் சிலை இங்குள்ளது.

இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெண்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன. அவை,

பழனி தண்டாயுதபாணி சிலை. மற்றொன்று பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.

நவபாஷான சிலை

உலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் சித்தர் போகர். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர். ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் இவர் உருவாக்கியது தான். அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தருவார்.

சுமார் 10, 12ம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட போது கடைசி 12வது வனமான…. பழனி மற்றும் கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை.

பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிப்பார் போகர். அதற்கான மூலிகைகள் மற்றும் ராசாயனப் பொருட்களை சேகரித்து முருகன் சிலையை உருவாக்கினார்.

பழனி மலை

அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் வந்தது. அக்கோவிலை இறைவனிடம் வேண்டி… சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்டச் செய்தார் என்பது தனி வரலாறு.

பின்னர் மறுபடியும் சீனா சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்றார். பின்னர் யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார்.

அருணகிரி நாதர்

அந்த சிலைதான் பூம்பாறை மலை உச்சியில் உள்ள சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார்.

அப்போது ராட்சசி ஒருவள் அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். அதைக் கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம்.

குழந்தை வேலர்

Kuzhanthai Velar
Kuzhanthai Velar

இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்டு குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் அருள் பாலித்து வருகிறார். அவரின் பக்கத்திலேயே அருணகிரிநாதருக்கும் சிலை உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.