பூஜையின்போது இவற்றையெல்லாம் கவனிக்க தவறாதீங்க!!- பூஜையறை குறிப்புகள்

நமக்கு மிஞ்சியை சக்தியை இறை என்றுணர்ந்து, இறையின்பால் நம்பிக்கை வைப்பது எப்போதும் நல்லது. நமக்கு பிடிச்ச இறைவனை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால், பூஜை செய்து வழிபடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்காள் இருக்கின்றது. சிறு தவறும் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும். அதனால் பூஜையின் முழுபலன் கிடைக்க பூஜையின்போது இவற்றில் கவனம் செலுத்துங்கள்…

c879e6cf111d263a87a19c5a72473622

பூஜைக்கு வைக்கப்படும் வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைபாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது. நமக்கு இடப்பக்கமாவும், சுவாமிக்கு வலப்பக்கமாவும் வெற்றிலைக்காம்பு இருக்க வேண்டும்.

தினசரி பூஜைக்கு அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நைவேத்தியமாய் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்துதான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். புழுங்கல் அரிசி கடவுளுக்கு படைக்க ஏற்றதில்லை. காரணம் நெல்லை வேகவைத்து உமி, தவிட்டை நீக்கி கிடைப்பதே புழுங்கல் அரிசி ஆகும். கடவுளுக்கு படைக்கும்போது ஒருமுறை வெந்ததையே படைக்கவேண்டும். ஏற்கனவே வெந்த புழுங்கல் அரிசியில் செய்தால் அது பழையனவற்றுக்கு ஈடாகும்.

வினாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை மாதிரியான விசேச நாட்களில், நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறோம். இவை கிடைத்தால் மற்ற நாட்களிலும் வைத்து படைக்கலாம் தப்பில்லை.

வாழைப்பழத்தில் நாட்டு வாழைப்பழம் மட்டுமே பூஜைக்கு உகந்து கற்பூரவள்ளி, செவ்வாழை, பச்சை வாழையெல்லாம் பூஜைக்கு ஆகாது.

குடுமி இல்லாத தேங்காயும். அழுகல் தேங்காயும் பூஜைக்கு ஆகாது. தேங்காயை உடைத்தப்பின், முக்கண் இருக்கும் தேங்காயின் மேல்பாகம் நமக்கு இடைக்கைபக்கம் கடவுளுக்கு வலப்பக்கமாக இருக்க வேண்டும். தேங்காயின் கீழ்ப்பாகம் நமக்கு வலப்பக்கமும் கடவுளுக்கு இடப்பக்கமும் இருக்க வேண்டும்

வினாயகரை துளசியால் அர்ச்சிக்கக்கூடாது. அதுப்போல் வைணவ கடவுளுக்கு அட்சதையும், சிவனுக்கு தாழம்பூவும், திருமகளுக்கு தும்பை பூவும், சரஸ்வதிக்கு பவளமல்லியும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு ஏற்றதல்ல.

வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்களும், அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விருச்சிப்பூ பூஜைக்கு ஏற்றது.

சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஆகாது என சொல்வார்கள். கடவுள் படைப்பில் எதுவுமே ஒதுக்கி வைக்கப்படுவதில்லை. இவற்றை பூஜையின்போது பயன்படுத்தாமல் சுவாமி அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.

பூஜையறை குறிப்புகள் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews