பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்


5df6e52e97ef3a09909e93a0c6d11fe4-1

இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே

இந்த படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம்ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இன்றுடன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இதனை அடுத்து கார்த்தி, ஜெயம் ரவி நாடு திரும்பியுள்ளனர்

இந்த நிலையில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதே தாய்லாந்து தொடங்க உள்ளதால் படக்குழுவினர் அங்கேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இன்று அல்லது நாளை தாய்லாந்து திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...