பாலிவுட், கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் நாவலை தழுவி உருவானப்படம் ’பொன்னியின் செல்வன்’படத்தின்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற முக்கிய நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்திருக்கும் நிலையில் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
அதன் படி, வருகின்ற செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி, படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நேரு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Grand audio and trailer launch of #PS1 – September 6th at The Nehru indoor stadium!#PonniyinSelvan #CholasAreComing
In theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!#ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/QqV6PARTHM
— Lyca Productions (@LycaProductions) August 30, 2022