பிறைச்சூடியவன் – தேவாரம் பாடலும், விளக்கமும்


95d9742f0f77b140c9e9598c52cedca0

பாடல்

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி      
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்          
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்            
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.

விளக்கம்

கங்கை நீர் நிரம்பி, நிமிர்ந்த சிவந்த சடைமுடிமீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!

தேவாரம் பாடலும் விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.