பிள்ளையாரின் அருளைப்பெறும் முறைகளும் மந்திரங்களும்

94fa065e473be2969e361674b468e01e

பிள்ளையாரின் அருளைப் பெற முயற்சி செய்யுங்கள்!

இப்பிறவி முழுவதும் நிம்மதியாக வாழ்வீர்கள்!!!

உங்கள் வாழ்க்கை இதுவரை எப்படி இருந்தாலும் பரவாயில்லை.இன்று முதல் உங்கள் தலைவிதியை நீங்களே மாற்றி எழுத முடியும்.முழுமுதற்கடவுள் பிள்ளையாரின் அருளைப் பெற இன்று முதல் முயற்சி செய்ய ஆரம்பியுங்கள்.

இங்கே 43 வகையான பிள்ளையார் அருளைத் தரும் மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இதில் ஏதாவது ஒரு மந்திரத்தை மட்டும் தேர்வு செய்யுங்கள். அதை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் போனில் அதை போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் தெருவில் இருக்கும் பிள்ளையார் சன்னதி முன்பாக நின்று கொண்டு ஒன்பது தோப்புக்கரணம் போடுங்கள்.

“பிள்ளையாரப்பா எனக்கு சரியான குரு கிடைக்கவில்லை எனவே நீயே எனக்கு குருவாக இருந்து இந்த மந்திரத்தை உபதேசம் செய்து அருள்புரிவீராக” என்று வேண்டிக் கொள்ளுங்கள்!

இன்று முதல் அந்த ஒரே ஒரு மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பியுங்கள்.மந்திர ஜபம் பற்றி சில அடிப்படை உண்மைகளை உங்களுக்கு இப்போது விளக்க வேண்டி இருக்கிறது.(ஒன்றுக்கு மேற்பட்ட மந்திரங்களை ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாகாது)

காளி மந்திரம், துர்க்கை மந்திரம் ,வராகி மந்திரம் ,நரசிம்ம மந்திரம் ,லட்சுமி நரசிம்மர் மந்திரம் என்று எந்த மந்திரம் ஜெபித்தாலும் அதற்கு பலவிதமான சில கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும். முதலில் முறைப்படி ஒரு குருவிடம் தீட்சை வாங்க வேண்டும்.அதன்பிறகு அசைவம், மது, போதைப் பொருட்கள், பீடி ,சிகரெட், கஞ்சா, கூல் லிப் போன்ற எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தக் கூடாது.

உங்கள் வீடு அல்லது கோயிலில் ஒரு விரிப்பு விரித்து அதன் மீது அமர்ந்து தீபமேற்றி பத்தி பொருத்தி ஜெபிக்க வேண்டும்.ஜெபிக்க ஆரம்பிக்கும்போது உடல் தூய்மையாக இருக்க வேண்டும்.

சில உக்கிர பெண் தெய்வ மந்திர ஜெபம் ஜெபிக்க ஆரம்பித்தது முதல் அந்த மந்திரம் சித்தியாகும் வரை கண்டிப்பாக அரை விநாடி கூட காம சிந்தனை இருக்கக் கூடாது. காம ரீதியான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. மீறினால் மரணம் அல்லது பைத்தியம் பிடிக்கும்.

ஆனால் பிள்ளையார் மந்திர ஜபத்தின் போது இந்தக் கட்டுப்பாடுகள் என்று எதுவுமே கிடையாது. பிள்ளையார் மந்திர ஜபத்தை குளிக்கும்போது ஜெபிக்கலாம்; சாப்பிடும்போது ஜெபிக்கலாம்; பயணம் செய்யும்போது ஜெபிக்கலாம்; தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது கூட ஜபிக்கலாம்.;

ஒரு நாளுக்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஜெபிக்கலாம். அதிகபட்சமாக 18 மணிநேரம் ஜெபிக்கலாம். இவ்வாறு தினமும் ஜெபித்து வரும்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் அந்தப் பிள்ளையார் மந்திரம் சித்தி ஆகி விடும்.

“சித்திஆகுதல் “என்றால் அந்த மந்திரத்துக்கு உயிர் வந்துவிடும்!!! சித்தி ஆனதற்கான அடையாளமாக கனவில் பிள்ளையார் தொடர்பான சில காட்சிகள் தெரியும். அதன்பிறகு அந்த மந்திரம் உங்களுக்கு இந்த பிறவி முழுக்க வழிநடத்தும்.

சீக்கிரமாக பிள்ளையார் மந்திரம் சித்தி ஆவதற்கு ஒரு எளிமையான வழியை எனது குரு தெரிவித்துள்ளார்.

அரசமரமும் வேப்பமரமும் சேர்ந்து இருக்க வேண்டும். அங்கே விநாயகர் சன்னதி இருக்க வேண்டும்.அந்த அரச மரமும் வேப்ப மரமும் சேர்ந்து உள்ள இடத்தில் அதன் நிழல் பகுதி எவ்வளவு தூரம் பரவி இருக்கிறதோ, அதற்குள் ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும்.ஏதாவது ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ள வேண்டும்.அப்படி அமரும்போது நமது உடலின் எந்த பாகமும் தரையில் படக்கூடாது.

குறைந்தது ஒரு மணி நேரம் பிள்ளையார் மந்திரம் ஜெபிக்க வேண்டும். அதிகபட்சம் கணக்கில்லை!அரச மரமும் வேப்ப மரமும் சேர்ந்து அதன் அடியில் பிள்ளையார் சன்னதி இருக்கக்கூடிய கோயில்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்றன.நமது பக்கத்து நாடு இலங்கையிலும் கூட இவ்வாறு இருக்கின்றன. இங்கே குறைந்தது ஒரு ஆண்டு வரை ஜெபிக்கலாம்.தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் வாழ்நாள் முழுவதும் ஜெபிக்கலாம்.

” உரு ஏற திரு ஏறும்” என்பது திருமூலரின் வாக்கு. உரு என்றால் ஒரு வார்த்தை அல்லது மந்திரத்தை திரும்பத் திரும்ப சொல்லுதல் என்று பெயர். திரு என்றால் வசீகரிக்க கூடிய காந்த சக்தி கொண்ட முகம் என்று பெயர்.

தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஜபித்தால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். அதற்கு ஜெப சூடு என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.அது உடலில் அதிகமான உணர்ச்சி கொந்தளிப்பை உருவாக்கும்.அவ்வாறு உருவாகாமல் இருக்க தினமும் சூடான சாதத்தில் நெய் கலந்து சாப்பிட வேண்டும். அல்லது தினமும் ஒரு முறை இளநீர் அருந்தவேண்டும்.அல்லது தினமும் 50கிராம் வெண்ணெய் சாப்பிட வேண்டும்.

இணையம் வழியாக எல்லா கடவுள்களின் மந்திரங்கள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் எப்படி அந்த மந்திரத்தை ஜெபிப்பது எப்படி அந்த மந்திரத்தை சித்தி அடைவது என்பதை யாரும் சொல்லித் தர தயாராக இல்லை.

வெகு அரிதாக ஒரு சில குருமார்கள் மட்டும் பயிற்சி வகுப்பு அல்லது நேரடி தீட்சை மூலமாக ஒரு வருடத்தில் சில நாட்கள் மட்டும் சொல்லித் தருகிறார்கள். அதற்காக நீங்கள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அல்லது தென் மாநிலங்கள் முழுவதும் பலமுறை பயணிக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் எந்த ஒரு தெய்வத்தின் அனுகிரகம் பெற முயற்சித்தாலும் அந்த முயற்சி வெற்றி பெற்றாலும் கிடைத்த வெற்றி நிலைத்து நிற்க பிள்ளையாரின் ஆசிர்வாதம் தேவை.

எனவே ஏதாவது ஒரு பிள்ளையார் மந்திரத்தை இன்று முதல் ஜெபிக்க ஆரம்பிக்கும்படி உங்களுக்கு எமது குருநாதர் ஆணைப்படி போதிக்கிறோம்.

1. ஏகாக்ஷர கணபதி: (கணபதி அருள் கிடைக்க)

மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம:

2. மகாகணபதி : (பரிபூரண சித்தி)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே

வசமானய ஸ்வாஹா

ஹஸ்தீந்த்ரா நநமிந்து சூடமருணச் சாயம் த்ரி நேத்ரம் ரஸாத்

ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸரோ ஜகரயா ஸ் வாங்கஸ்தயா ஸந்ததம்

பீஜாபூர-கதேக்ஷú- கார்முக-லஸச்-சக்ராப்ஜ-பாசாத்பல

வ்ரீஹ்யக்ர-ஸ்வவிஷாண-ரத்நகலசாந் ஹஸ்லதர வஹந்தம் பஜே

3. மோகன கணபதி : (எப்போதும் பாதுகாப்பு)

ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய

க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே

வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா

4. லக்ஷ்மி கணபதி : (செல்வம் வளர)

அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே

வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய

லக்ஷ்மீ கணேச வரவரத

ஆம் ஹ்ரீம் க்ரோம்

ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !

இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்

கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே

வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:

ஈ. பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய

கும்பாங்குசாந்

பாசம் கல்பலதாம் ச கட்க வில

ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர

ச்யாமே நாத்த-ஸரோருஹேண

ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே

கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ

லக்ஷ்மி கணேசோவதாத்

5. ருணஹர கணபதி : (கடன் தொல்லை நீங்க)

ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம: பட்

6. மகாவித்யா கணபதி : (தேவியின் அருள் கிட்ட)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்

கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத

ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

7. ஹரித்ரா கணபதி : (உலகம் வயப்பட)

ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே

வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

8. வக்ரதுண்ட கணபதி : (அதிர்ஷ்ட லாபம்)

வக்ர துண்டாய ஹும்

9. நிதி கணபதி : (செல்வம் கிட்ட)

ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி தோ ரத்னதா துமான்:

ர÷க்ஷõஹணோ பலக ஹநோ வக்ரதுண்டாய ஹும் !!

10. புஷ்டி கணபதி :

ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா

11. பால கணபதி : (மகிழ்ச்சி)

ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய ஸ்வாஹா

கரஸ்த-கதளீ சூத

பநஸேக்ஷúக- மோதகம்

பால ஸுர்ய- நிபம் வந்தே

தேவம் பால கணாதிபம்

12. சக்தி கணபதி : (எல்லாக் காரியமும் நிறைவேற)

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க-யஷ்டிம்

பரஸ்பராச் லிஷ்ட-கடிப்ரதேசம்

ஸந்த்யாருணம் பாசஸ்ருணீ வஹந்தம்

பயாபஹம் சக்தி கணேசமீடே

13. ஸர்வ சக்தி கணபதி : (பாதுகாப்பு)

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா

14. க்ஷிப்ர பிரஸாத கணபதி : (சீக்கிரம் பயன்தர)

ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம:

15. குக்ஷி கணபதி : (நோய் நீங்க)

ஓம் ஹும் க்லௌம் டட ராஜ

ஸர்வஜன கதிமதி க்ரோத ஜிஹ்வா

ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

16. சந்தான லக்ஷ்மி கணபதி : (பிள்ளைப் பேறு உண்டாக)

ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய

மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா

17. சுவர்ண கணபதி : (தங்கம் கிடைக்க)

ஓம் க்ஷ்ம்ரியூம் க்ஷிப்ர கணபதயே ஸுவர்ணகே ஹே

வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்ரதாய க்லீம் வஷட்ஸ்வாஹா

18. ஹேரம்ப கணபதி : (மனச்சாந்தி)

ஓம் கூம் நம:

19. விஜய கணபதி : (ஐயம் ஏற்பட)

ஓம் க்லௌம் ஸ்ரீம் ஸர்வவிக்ன ஹந்த்ரே

பக்தானுக்ரஹ கர்த்ரே விஜயகணபதயே ஸ்வாஹா

பாசாங்குச-ஸ்வதந் தாம்ர

பல வா நாகு வாஹந

விக்நம் நிஹந்து ந: ஸர்வம்

ரக்தவர்ணோ விநாயக

20. அர்க்க கணபதி : (நவக்கிரக சாந்தி)

ஓம் கம் கணபதி அர்க்க கணபதி வரவரத

ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

21. உச்சிஷ்ட கணபதி : (முக்காலமும் உணர)

ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய

லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே

ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா

நீலாப்ஜ-தாடியீ-வீணா

சாலி- பாசாக்ஷஸுத்கரம்

தததுச் சிஷ்ட- நாமாயம்

கணேச: பாது மேசக

22. விரிவிரி கணபதி : (விசால புத்தி)

ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே

வசமானய ஸ்வாஹா

23. வீர கணபதி : (தைரியம் வர)

ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :

இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்

வேதாள சக்தி-சர- கார்முக- சக்ர-கட்க

கட்வாங்க-முத்கர-கதாங்குச-நாகபாசாந்

சூலம் சகுந்த-பரக-த்வஜமுத்ஹந்தம்

வீரம் கணேசமருணம் ஸததம் ஸ்மராமி

24. ஸங்கடஹர கணபதி : (தொல்லை யாவும் நீங்க)

ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம ஸர்வஸங்கடம்

நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா

25. விக்னராஜ கணபதி : (ராஜயோகம்)

ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா

சங்கேக்ஷú-சாய-குஸுமேஷு குடார- பாச

சக்ர-ஸ்வதந்த-ஸ்ருணி-மஜ்சரிகா-சராத்யை

பாணிச்ரிதை-பரிஸமீஹித பூஷணஸ்ரீ

விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌர

26. ராஜ கணபதி

ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால

விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத

காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய

ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய

பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய

ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய

மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா

27. துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய

மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:

28. யோக கணபதி :

ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய

ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:

29. நிருத்த கணபதி : (கலை வளர)

ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய

சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:

பாசாங்குசா பூப-குடார-தந்த

சஞ்சத்-கராக்லுப்த-வராங்குலீநம்

பீதப்ரபம் கல்பதரோ ரத: ஸ்தம்

பஜாமி ந்ருத்தோய பதம் கணேசம்

30. ஸித்தி கணபதி : (எல்லாக் காரியங்களும் வெற்றி)

ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே

ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய

வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ

ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா

பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட

திலமோதகை: ஸஹ

உத்வஹந் பரசுமஸ்து தேநம

ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா

31. புத்தி கணபதி : (கல்விப் பேறு)

ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா

32. மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)

ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய

மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட

ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே

வசமானய ஸ்வாஹா

33. மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)

ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ

மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி

ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய

ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய

மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா

34. குரு கணபதி : (குருவருள் உண்டாக)

ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய

ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:

35. தூர்வா கணபதி : (தாப நீக்கம்)

ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய

தூர்வா கணேசாய ஹும்பட்

36. அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை அடைய)

ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய

ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம

அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே

வசமானய ஸ்வாஹா

37. பக்த கணபதி

நாளிகேராம்ர- கதளீ

குடபாயாஸ- தாரிணம்

சரச்சந்த்ராய- வபுஷம்

பஜே பக்தகணாதிபம்

38. த்விஜ கணபதி

ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ

வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்

ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்

த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ தந்ய

39. க்ஷிப்ர கணபதி

தந்த-கல்பலதா- பாச

ரத்ன கும்பாங்கு சோஜ்வலம்

பந்தூக-கமநீயாபம்

த்யாயேத் க்ஷிப்ர-கணாதிபம்

40. ஹேரம்ப கணபதி

அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா

ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச

பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே

கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா

41. ஊர்த்வ கணபதி

கல்ஹார- சாலி-கமலேக்ஷúக- சாப- பாண

தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க

ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா

தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந

42. ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே

கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்

ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய

ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய

ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்

குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்

தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்

43. வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்

(குமார சம்ஹிதையில் காண்பது)

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்

க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே

க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி

வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:

ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews