சப் – இன்ஸ்பெக்டர் தேர்விற்கான உடல்தகுதி தேர்வு துவக்கம்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட சப் – இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 2 – ம் கட்ட சான்றிதழ் மற்றும் உடல்தகுதி தேர்வு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்றும் , நாளையும் நடக்கிறது .

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 525 பேருக்கு உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. சீருடைப்ப ணியாளர்கள் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட அழைப்பாணை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தேர்வு 2 கட்ட மாக தேர்வு நடைபெறும் . அதில் முதல் கட்டமாக நேற்று  ( 23 – ந் தேதி) சான்றிதழ் சரிபார்ப்பு , உயரம் மற்றும் மார்பு அளவு அளத்தல் , 1500 மீ . ஓட்டம் ஆகியவை நடத்தப்படும் . 2 – ம் கட்டமாக இன்று ( 24 – ந் தேதி ) அன்று அழைப்பாணை சரிபார்ப்பு , கயிறு ஏறுதல் , உயரம் தாண்டுதல் ( அல்லது ) நீளம் தாண்டுதல் , 100 மீட்டர் ( அல்லது ) 400 மீட்டர் ஓட்டம் நடைபெறும் .

முன்னாள் படை வீரர்களுக்கு முதல்நாளில் சான்றிதழ் சரிபார்ப்பு , 1500 மீ . ஓட்டம் ஆகியவையும் , 2 – ம்நாளில் அழைப்பாணை சரி பார்ப்பு , குண்டு எறிதல் , உயரம் தாண்டுதல் ( அல்லது ) நீளம் தாண்டுதல் , 100 மீட்டர் ( அல்லது ) 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெறும் .

மைதானத்திற்குள் செல் போன் கட்டாயமாக கொண்டு வரக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது . இந்த தேர்வையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.