தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்குவதால் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் கொளுத்தி வந்த நிலையில் பல மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்து வந்தது. தமிழகத்தில் சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்த இதமான சூழல் நிலவுவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 5-ஆம் தேதி முதல் மே 7-ஆம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று கள்ளகழகர் எதிர்சேவை… கோலாகலம் பூணும் கூடல் நகர்… உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்..!
இந்த வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.