சினிமா திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தனது மனைவி ஐஸ்வர்யாவும் இவரும் விவகாரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனால் திரைத் துறை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களுக்கு புத்திமதி சொல்லியும் கேட்கவில்லை.
இந்த நிலையில் தனுஷின் அடுத்த படமான ‘மாறன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகி வைரலானது. “ஏய்.. இது பொல்லாத உலகம்.. நீ ரொம்ப ஷார்ப்பாய் இரு..’’ என்று தொடங்கும் படல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பாடலின் நடுவே வரும், ‘ஏன் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா.. நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூமா..” என்ற வரிகள் தான். முதலில் இப்பாட்டில் இந்த வரிகள் கிடையாது என படக்குழுவினர் தெரிவித்தனர்.
ஆனால் பாடலாசிரியர் விவேக்கிடம் இதுபோன்ற வரிகள் வேண்டும் என்றும் கேட்டு வாங்கி மீண்டும் பாடி ரிக்கார்டிங் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த பாடல் வரிகல் மூலம் தனுஷ் தன் மனைவி ஐஷ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைப்பதாக அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் தன் மகளுக்காக அவர் செய்த செயல் மாப்பிள்ளை சமாதானமாகிட்டார். இனி மகளையும் சமாதானப்படுத்தி நல்லபடியா வாழ்ந்தா நல்லா இருக்கும்” என்று ரஜினி நண்பர்களிடம் கண்கலங்கியதாக தெரிவித்தனர்.