பி.எஃப். வட்டிக்குறைப்பு விவகாரம்: ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..
தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மறு பரிசீலனை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுக் கூட்டத்தில் தொழிளாலர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 விழுக்காட்டிலிருந்து 8.1 விழுக்காடாக குறைக்க முடிவு எடுத்துள்ளதாகவும் இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 8.8 விழுக்காடாக இருந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் தற்போது 8.1 விழுக்காடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டிக் குறைப்பு என்பது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகிதம் என்றும் அதாவது 977-78 ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 விழுக்காடாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மறுரீசீலனை செய்ய வேண்டும் என்றும் இதற்கான அழுத்ததை திமுக கொடுக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
