ஒமைக்ரான் பரவல் காரணமாக ஒடிசாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட தடை!

இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிதீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது ஒமைக்ரான். இவை முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றியது. அதன் பின்னர் உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 12 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஒடிசா

இதனால் ஒவ்வொரு மாநில அரசும் பல கட்டுப்பாட்டு விதிகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக இன்று காலை உத்தரப் பிரதேச மாநில அரசு நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக கூறியிருந்தது.

தற்போது ஒரிசா மாநில அரசும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல தடைகளை விதித்துள்ளது. அதன்படி ஒடிசாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக நாளை முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment