ஒன்றரை கோடி பேர் வேலையிழப்பு – இளைஞர்களுக்கு எச்சரிக்கை பதிவு !

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி உலகப் பொருளாதார மன்றம் ஆய்வறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

வேலை வாய்ப்புகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஸ்விட்சர்லாந்தின் கால்ஷினி நகரை தலைமையகமாகக் கொண்ட உலக பொருளாதார மன்றம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக அளவில் உள்ள மொத்த வேலை வாய்ப்புகளில் 23 சதவிகிதம் வரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் பாதிப்படையும் என்று இதில் கூறப்பட்டுள்ளது .

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகெங்கும் ஒரு கோடியே 40 லட்சம் பணி இழப்புகள் ஏற்படும் என்கிறது 8 கோடியே 30 லட்சம் வேலைகள் இல்லாமல் ஆகிவிடும் என்று ஆறு கோடியே 90 லட்சம் புதிய வேலைகள் மட்டும் உருவாகும் என்றும் கூறியுள்ளது .

இதற்கு செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் வளர்ச்சி பருவநிலை மாற்றம் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது .

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் – சித்திரை திருவிழா!

மேலும் அலுவலக நிர்வாகம் பாதுகாப்பு பணி தொழிற்சாலை மற்றும் விற்பனையாக பணிகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...