
News
குஷியில் ஆசிரியர்கள்; ஆசிரியர்கள் வேலைநிறுத்த நாட்கள் பணிக்காலங்களாக அறிவிப்பு!!!
குஷியில் ஆசிரியர்கள்; ஆசிரியர்கள் வேலைநிறுத்த நாட்கள் பணிக்காலங்களாக அறிவிப்பு!!!
தமிழகத்தில் ஆசிரியர் விரோதமாக பல்வேறு விதமாக சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ஆன்லைன் வகுப்புகள் மோசடியானது அதிகமாக நம் தமிழகத்தில் காணப்பட்டது.
ஆசிரியர்கள் பலரும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் சில காலங்களாக ஈடுபட்டு வந்தனர். அவர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து தற்போது தமிழக அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் ஆசிரியர்களை மகிழ்ச்சி அளிக்கும் வண்ணமாக காணப்படுகிறது.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்ததை ரத்து செய்தது தமிழக அரசு.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் அவர்கள் வேலை நிறுத்த நாட்களை பணிக்காலங்களாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலை நிறுத்த போராட்ட காலங்களில் பணிக்காலங்களாக மாற்றி அரசாணையை அறிவித்து உள்ளது தமிழக அரசு.
ஒழுங்கு நடவடிக்கையால் பதவி உயர்வு பாதிப்பு இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் பலரும் மகிழ்ச்சியில் காணப்பட்டுள்ளனர்.
