தமிழகம், அசாமை தொடர்ந்து ஆந்திராவிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு! நாளை முதல் அமல்;

ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்றைய தினம் ஒரு லட்சத்தை தாண்டியது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதிலும் ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரசின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நம் தமிழகத்தில் நேற்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சில நிமிடங்களுக்கு முன்பு அசாம் மாநில அரசு இரவு நேர ஊரடங்கில் சில மாற்றத்தை செய்துள்ளது. இதனால் அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நேரம் சற்று அதிகமாகக் காணப்படுகிறது.

இந்த சூழலில் நாளைய தினம் முதல் ஆந்திர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா  பரவல் அதிகரிப்பால் ஆந்திராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment