தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 6-ம் தேதி வரையில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் உயிரிழப்பு – 2 ஓட்டுநர்கள் கைது!!
அதே போல் வருகின்ற 7,8 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுரை ஆவினில் முறைகேடு – 47 பேர் நீக்கம்!!
மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என வானிலை மையம் அறிக்கையில் வாயிலாக தெரிவித்து உள்ளது.