பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய திட்டங்கள்? அதுவரை மக்கள் அமைதி காக்க வேண்டும்..!
தற்போது இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் இலங்கை அதிபருக்கு எதிராக மக்கள், அரசியல் கட்சியினர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதனால் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் அனைத்துக் கட்சிகளுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இவ்வாறுள்ள நிலையில் இன்று மாலை நாட்டு மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்புகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி தற்போது புதிய அறிவிப்புகளை இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.
அதன்படி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய திட்டங்கள் நடைபெற உள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய திட்டங்களை முன்னெடுத்து உள்ளோம் என்று இலங்கை பிரதமர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சவே கொண்டுள்ளார்.
