5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு சிசிடிவி கேமரா! சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு புதிய உத்தரவு!!
கடந்த சில நாட்களாக உயர்நீதிமன்றம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் அது குறித்து சில முக்கிய அறிவிப்புகளும் கிடைத்துள்ளது.
அதன்படி பன்னிரண்டு சக்கரங்களுக்கும் மேல் உள்ள சுமார் 16.2 டன்னுக்கு மேல் எடையுள்ள வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட்டுள்ளது.
சத்தியமங்கலம் திம்பம் மலைப்பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அதற்கு மேல் செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளது.
மாநில பொது போக்குவரத்து வாகனங்கள் இருசக்கர வாகனங்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
