News
இமயமலையையும் பாதித்த கொரோனா வைரஸ் அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவது தெரிந்தது. அந்த வகையில் தற்போது நேபாளம் இதுகுறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
இதன்படி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக இமயமலையில் மலையேற்றம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையேறுபவர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நேபாள் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறைந்த வெப்பநிலையில் அதிக நாட்கள் உயிர்வாழும் என்பதால் இந்த வைரஸ் தாக்கப்பட்டவர் யாராவது மலையேறினால், அவர்களால் இமயமலையிலும் கொரோனா வைரஸ் பரவிவிடும் என்ற அச்சத்தினால் இந்த நடவடிக்கையை நேபாள அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
