
Entertainment
தேனிலவை தள்ளி போடும் நயன்தாரா! காரணம் தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இந்தப் படம் 2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த 7 ஆண்டுகளாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகிறார்கள். அவ்வப்போது, இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி மட்டுமே வெளியாகி வருகிறது.
இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு நயன்தாரா,விக்னேஷ் இணைந்து திருப்பதி சென்ற போதும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டதாக கூறப்பட்டது .
இதை தொடர்ந்து இவர்களது திருமணமும் திருப்பதியில் ஜூன் 9-ல் தான் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், 150 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்குத் திருப்பதி நிர்வாகத்தின் அனுமதி கொடுக்கவில்லை அதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாமல் திருமணம் நடத்தவேண்டாம் என இருவரும் இணைந்து முடிவெடுத்துள்ளனர்.
அதனால் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் அதே ஜூன் 9-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது
திருமணத்திற்கு பின்பும் நயன்தாரா மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ளாராம்.மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பின்பு ஹனிமூன் கிடையாது என கூறியுள்ளார்.அதற்கு காரணமாக சில கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது.
திருமணத்துக்கு முன்பே பல முறை கருத்தடை மாத்திரையை நயன்தாரா பயன்படுத்தி வந்ததால், அவரது கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் நயன்தாரா திருமணத்துக்கு பின்பு குழந்தை பெற்று கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமணம் முடிந்த நயன்தாரா,கேரளாவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, ஆறு மாதம் அங்கே தங்கி சிகிச்சை பெற உள்ளார் நயன்தாரா. அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பிரச்சனை சரி செய்து குழந்தை பெற்றெடுக்கும் வகையில் அவரது கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்கப்போவதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின் நிக்கி வெளியிட்ட புகைப்படங்கள்! தக தகனு மின்னுறாங்கப்பா..
சிகிச்சையில் இருக்கும் போது நயன்தாராவை பார்க்க மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் விக்னேஷ் சிவனுக்கு சிறிதும் வருத்தம் இல்லை, நயன்தாராவை திருமணம் செய்தால் போதும் என்கிற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
