
Entertainment
டும் டும் நேரத்தை வெளியிட்ட நயன்!.. யாருலா வருவாங்க தெரியுமா?..
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இந்தப் படம் 2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த 7 ஆண்டுகளாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகிறார்கள். அவ்வப்போது, இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி மட்டுமே வெளியாகி வருகிறது.
இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்பு நயன்தாரா,விக்னேஷ் இணைந்து திருப்பதி சென்ற போதும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டதாக கூறப்பட்டது .
இதை தொடர்ந்து இவர்களது திருமணமும் திருப்பதியில் ஜூன் 9-ல் தான் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், 150 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்குத் திருப்பதி நிர்வாகத்தின் அனுமதி கொடுக்கவில்லை அதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாமல் திருமணம் நடத்தவேண்டாம் என இருவரும் இணைந்து முடிவெடுத்துள்ளனர்.
அதனால் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் அதே ஜூன் 9-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது
நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் வைரலாகும் புகைப்படம்!!.. என்ன வைத்துள்ளார் தெரியுமா?..
திருமணம் அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு நடைபெற உள்ளதாகவும் , இந்த திருமணத்திற்கு ரஜினி, கமல், அஜீத், விஜய் என முன்னணி பிரபலங்கள் 200 பேருக்கு மட்டுமே அழைத்து அழைப்பு வைக்கப்பட்டுள்ளது திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்கு பின் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
