கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.
முதல் ஹனிமூனில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் ரசிகர்களிடம் பொறாமையை ஏற்படுத்தினார். அதன்பின், ஹனிமூன் முடித்து ஜ்வான் படப்பிடிப்புக்கு நயன் தாரா சென்றார், செஸ் /ஒலிம்பியாக் நிகழ்ச்சியை இயக்க விக்னேஷ் சிவனும் பிஸியானர்.
இந்நிலையில் ஸ்பெயினுக்கு தனி விமானத்தில் கணவர் மடிமீது உட்கார்ந்தும் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இரண்டாவது ஹனிமூன் சென்றார் விக்னேஷ் சிவன். தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.
தம்பதிகள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து வருகின்றனர், மேலும் பல அற்புதமான புகைப்படங்கள் அவர்களது காதலைப் பறைசாற்றுகின்றன. இந்நிலையில் பலரும் புது மணத்தம்பதியினர் தங்கள் ஹனிமூனை கொண்டாடி வருவருவதாகத்தான் பலரும் நினைத்து வருகிறோம்.
ஆனால் அதற்கு பின்னணி உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் வைத்து ஏ.கே.62 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதற்கு லோகேஷன் பார்க்க தான் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் ஜோடியாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளாராம்.
திருச்சிற்றம்பலம் படத்துக்கு தனுஷின் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா ?
ஒருபக்கம் நயன்தாராவுடன் சுற்றுலா, மறுபக்கம் ஏகே 62 படத்திற்கான லோகேஷன் தேர்வு என இரண்டையும் ஒரே நேரத்தில் முடிக்க திடடமிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். 10 நாட்கள் சுற்றிப்பார்த்து விட்டு சென்னை திரும்பியதும் மீண்டும் பட வேலைகளில் பிசியாக உள்ளது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முதலில் வெளிநாடுகளில் நடப்பது உறுதியாகியுள்ளது.