நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் – தினம் ஒரு மந்திரம்


எத்தனை முயன்றும் தொழில், திருமணம், குழந்தைகள் படிப்பு என எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றதா?!
அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

பொருள்:
“பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே! தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே! உன்னை பணிகின்றேன்..

இந்த மந்திரத்தினை நரசிம்மருக்கு உகந்த செவ்வாய்கிழமைகளில் சொல்லி வந்தால் நினைத்தது நடக்கும். வாழ்வில் வெற்றிகள் குவியும்..

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews