
News
நானும் எனது தந்தையும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை!!: முன்னாள் பிரதமரின் மகன்;
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை விட்டு விலகினார். இதனால் இலங்கையில் பெரும் கலவரம் வெடித்தது. அதிலும் குறிப்பாக ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் அனைத்து பகுதிகளிலும் வெடித்தது.
இதன் காரணமாக காவல்துறை மற்றும் ராணுவத்தினருக்கு பல்வேறுவிதமான அனுமதிகள் வழங்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளிலேயே மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் நைஜீரியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் காட்டுத் தீ போல் பரவியது.
மேலும் அவர் பயணிக்கின்ற வீடியோவும் வெளியானதால் பெரும் சர்ச்சை உருவானது. இதுகுறித்து அன்றைய தினமே அவரது மகன் நமல் ராஜபக்சே நானும் என் தந்தையும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் அந்த எண்ணம் இல்லை என்றும் கூறினார்.
இந்த நிலையில் மீண்டும் அவர் இன்றைய தினமும் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். எனக்கோ, எனது தந்தைக்கு நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே கூறினார்.
கொழும்பு வன்முறை தொடர்பான விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என்றும் நமல் ராஜபக்சே கூறினார். அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க நான் தயார் என்று ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
