Entertainment
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாடலை எழுதிய பாடலாசிரியர் மரணம்
விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் மேகமாய் வந்து போகிறேன் பாடலை எழுதியவர் கவிஞர் முத்து விஜயன். இந்த பாடல் மிகப்பெரும் ஹிட் அடித்தது எல்லோருக்கும் தெரியும்.

பின்பு பெண்ணின் மனதை தொட்டு படத்தில் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியவர் இவர்.
மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் இரண்டு தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார்.
பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இவர் 800க்கும் மேற்பட்ட கவிதைகளை இவர் எழுதியுள்ளார்.
