
செய்திகள்
முதல்வருக்கு கொரோனா தொற்று: பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரிப்பு!!!
கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்களை மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது அரசியல் வாதிகளுக்கும் தொற்று உறுதியாகி வருகிறது.
அந்த வகையில் கடந்த செவ்வாய் கிழமை தமிழக முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் சென்னை காவிரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் நுரையீரலில் 10% பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
தற்போது அவர் இன்றைய தினத்தில் வீடு திரும்புவார் என அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர். அதே சமயம் முதலமைச்சரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த சூழலில் கொரோனா பாதிப்பால் முதல்வர் மருத்துவமனையில் உள்ள நிலையில் நலம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
