Tamil Nadu
பாதிப்பில்லாத மாவட்டங்களில் மே 3 முதல் ஊரடங்கு தளர்வு- உள்துறை அமைச்சகம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடுமையான லாக் டவுன் இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. மார்ச் 24ல் தொடங்கிய இந்த லாக் டவுன் ஏப்ரல் 14ல் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வரும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடருமா என சந்தேகம் வலுத்துள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு எங்கும் கடைபிடிக்கப்பட்டாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு என்பது குறையவில்லை. அதனால் மே 3ம் தேதி முதல் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கான புதிய வழிகாட்டல் நெறிமுறைகளை அடுத்து வரும் நாட்களில் வெளியிட இருப்பதாகவும் அவை மே 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை ஏற்கனவே உள்ள ஊரடங்கு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
