மார்ச் 20ஆம் தேதி ஆசிரியர்களுக்கு முக்கியமான நாள்! ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும்!!
தற்போது பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றினை கூறியுள்ளது. அதன்படி மார்ச் 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.
இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பின்பு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகள் கட்டாயம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மார்ச் 20-ஆம் தேதி சனிக்கிழமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாய அறிவிப்பினை பள்ளிக்கல்வி ஆணையர் கூறியுள்ளார். அதன்படி மார்ச் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏனென்றால் மார்ச் 20ஆம் தேதி அன்றைய தினம் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெறும். எனவே அதற்காக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
