பிரதமர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் மகிந்த ராஜபக்சே..! இலங்கையில் அடுத்த பிரதமர் யார் ?
இலங்கையில் கடந்த ஒரு மாதகாலமாகவே பெரும் பொருளாதர நெருக்கடி நிலவிவருகிறது. இதன் காரணமாக அங்கு வாழும் பொதுமக்கள் அத்தியாவச பொருட்களுக்கள் கூட வாங்க முடிய நிலை உருவாகி வருகிறது.
இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அதிபரை காப்பாற்ற , இடைக்கால அரசை அமைக்க இன்று மாலை அதிபருடன் முக்கியமான சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையில் தற்போது மோசமான நிலை உருவாகி வருவதால் அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அதன் படி, நாளை அவர் தனது பதிவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், அதன் பின்னர் புதிய பிரதமரை நியமிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அடுத்த பிரதமர் யார் என்ற முரண்பாடுகள் தொடர்வதாக தெரிகிறது.
