ஏப்ரல் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை…!! மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி;
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. அதன்படி ஏப்ரல் 14 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சித்திரை தேர்த்திருவிழா நடைபெறும். அந்த படி மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொடியேற்றம் இரண்டு நாட்கள் முன்பு நிகழ்ந்தது.
அதேபோல் தஞ்சை பெரிய கோவிலிலும் கொடியேற்றம் நிகழ்ந்தது. இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்தடுத்து சித்திரைத் திருவிழாவுக்காக கோவில்கள் தயாராகிக் கொண்டு வருகின்றன.
எனவே ஏப்ரல் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் விடுமுறை தினமாக காணப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 19ம் தேதியும் ஒரு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையாக உள்ளது மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியாக காணப்படுகிறது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏனென்றால் திருச்சியிலுள்ள மிகவும் பிரசித்த பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 19ம் தேதியில் திருச்சி உள்ளுர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
