நாகை மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நாகையில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: செல்போனை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு!!
இந்நிலையில் சுமார் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் விழாவில் தமிழகத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் ஒன்றைய தினத்தில் கொடியேற்று வைபவமும் தொடங்க உள்ளது.
இதற்காக வாழை மரங்கள், தோரணங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அப்பகுதி முழுவதும் ஜொலி ஜொலித்து வருகின்றன. இதற்கிடையில் ஜனவரி 2-ம் தேதி சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெறும்.
கதிகலங்கிய சீனா! ஒரே நாளில் 5 ஆயிரம் உயிரிழப்பு… பீதியில் உலக நாடுகள்!!
பின்னர் ஜனவரி-3 ம் தேதி பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் திருவிழா நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.