நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வரை மாநில அரசு நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய உதயநிதி ஸ்டாலின், மறைந்த மருத்துவக் கல்லூரி மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ள அரங்கம், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களை மருத்துவ மாணவர்களுக்குத் தெரிவிக்கும்.
சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
பெண்களுக்கான இலவசப் பேருந்து சேவை சாதனையை சுட்டிக்காட்டிய அமைச்சர், “இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை மாநிலத்தில் 250 கோடி பெண்கள் இலவசப் பயணத்தைப் பெற்றுள்ளனர். ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சம் மாணவிகளும், ‘இல்லம் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 1.10 கோடி பேரும் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.
என்எல்சி நிலம் கையகப்படுத்தல்: தீவிர போராட்டம் நடத்தப்படும் என சீமான் எச்சரிக்கை!
அதை தொடர்ந்து விழாவில் எம்பி தொல்.திருமாவளவன், மாநில அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பேசினர்.