குற்றங்களை பொருத்தருள்க -திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-26


dc6e8dae54baa46779c25f94d9541516

பாடல்

பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

பொருள்:

பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பதல்லாமல், இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை” என உம்மைப் பண்டிதர்கள் புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே! (எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள் நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

விளக்கம்

ஆதி, அந்தமில்லாத இறைவனின் புகழை அறிந்திராவிட்டாலும், அவனின் பெருமைகளை தெரிந்த அடியார்களிடம் அவனின் பெருமையை கேட்டு தெரிந்துக்கொள்ளாமல் இத்தனை நாள் வீணாய் கழித்த, நினைத்தாலே முக்தி தருபவனான அண்ணாமலையாரை குற்றங்குறைகளை பொறுத்தருளும் இறைவனை திருப்பள்ளியெழுந்து தரிசனம் தரவேண்டி பெண்கள் பாடப்பட்டதாய் அமைந்த பாடல் இது.

திருவெம்பாவை பாடல்களும் விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.