கிருஷ்ணனின் பூர்வீகம் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -21

bc97573bc48b245479d02ef15c29db96-1

 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப,
 மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்,
 ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்,
 ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்
 தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்,
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்,
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே,
 போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள் 
குடங்களை வைத்து பசுவின் மடியில் கை வைத்தாலே, குடங்கள் எல்லாம் நிறையும்படியாக தாராளமாகப் பாலைப் பொழியும் பசுக்களை கணக்கின்றி பெற்றிருக்கும் நந்தகோபரின் பிள்ளையே, அந்தப் பசுக்களுக்கு இருக்கும் வள்ளல்தன்மைகூட உனக்கு இல்லையா? நீ என்ன சாதாரண பிறவியா? என்று ஆண்டாள் கேட்கிறாள்.

விளக்கம்

ப்பின்னையை புகழ்ந்தும், கிருஷ்ணனைப் புகழ்ந்தும், இருவரையும் சேர்த்தே புகழ்ந்தும் கிருஷ்ணன் எழுந்தபாடில்லை. இப்போது கிருஷ்ணன் யாருடைய பிள்ளை, அவன் தந்தை எப்படிப்பட்ட வள்ளல், அவனுடைய செல்வச் செழிப்புதான் என்ன என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, கிருஷ்ணனை எழுந்திருக்குமாறு சொல்கிறாள்.

திருப்பாவை பாடலும் விளக்கமும் தொடரும்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.