நம் வீடுகளில் பொதுவாக மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான சிற்றுணவு தயாரிப்பது வழக்கம், அந்த வகையில் காரமான காராபூந்தி ஒரு நாள் செய்யலாமா..
தேவையான பொருட்கள் :
வீட்டில் மையாக அரைத்த கடலை மாவு – 200 கிராம்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள்,
கறிவேப்பிலை – சிறிது ,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப .
தீபாவளிக்கு மறக்காம இந்த தீபாவளி லேகியம் மட்டும் செஞ்சு பாருங்க! வேற மருந்தே வேண்டாம்!
செய்முறை:
கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்து கொள்ளவும். எண்ணெயை மிதமான சூடாக்கி கொள்ளவும்.
பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கவும் .
தீபாவளிக்கு ஈஸியா வீட்டுலே ரவாலட்டு பண்ணலாமா! ரெசிபி இதோ!
வீட்டிலே மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.