
தமிழகம்
கந்துவட்டி கொடுமை-ஆயுதப்படை காவலர் தற்கொலை!!: ஈபிஎஸ் வலியுறுத்தல்
நம் தமிழகத்தில் அதிக அளவு கந்து வட்டி தொல்லை வளர்ந்துள்ளது. இதனால் பல இடங்களில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. அதுவும் கடந்த சில நாட்களாக காவல் துறையினர் மத்தியில் தற்கொலையானது நிகழ்வது பலருக்கும் அதிர்ச்சியை அளிப்பதாக உருமாறியுள்ளது.
இந்த நிலையில் கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிபழனிசாமி கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்க வலியுறுத்தி உள்ளார்.
அதன்படி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தியினை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியுள்ளார். கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வகுமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
கள்ள லாட்டரி விற்பனை, ஆன்லைன் ரம்மி, கந்து வட்டி கொடுமை என எதுவெல்லாம் தமிழக மக்களின் நலனுக்காக ஒவ்வாதென மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களும் அம்மா அரசும் தடை செய்ததோ என்று உருக்கமாக கூறியுள்ளார்.
