காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மார்ச் 1-ல் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தை பெட்டகத்தை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மார்ச் 1ஆம் தேதி பிறந்த 15 குழந்தைகளுக்கு காஞ்சி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி ஏற்பாட்டில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மார்ச் 1ஆம் தேதி பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தை பெட்டகத்தை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் குழந்தைகளுக்கு வழங்கினார்.