Entertainment
மதுமிதா வெளியேற்றத்தினால் மனவருத்தம் கொண்ட கமல்ஹாசன்!!
விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், அனைவரின் வீடுகளிலும் பேசுகிற டாப்பிக் ஆகிவிட்ட பிக் பாஸ் கடந்த ஒரு வாரமாக பலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
முந்தைய சீசன்களைவிட, அதிக அளவிலான விஷயங்கள் நடக்கப் பெறுவதாலோ என்னவோ இதன்மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வனிதா மாஸ் என்ட்ரி கொடுக்கிறேன் என்ற பெயரில் வீட்டை ரணகளமாக்கிவிட்டார்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார். கையில் கட்டுடன் மதுமிதா வெளியே வந்தார்.
கமல் ஹாசன் வருத்தப்பட்டு ‘தட்டில் வைத்துக்கொடுத்த வெற்றியை தட்டிவிட்டு விட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது.’ என்றார். அதற்கு பதிலளித்த மதுமிதா உங்களுக்கும் எனக்கு மட்டுமே தெரிந்த விஷயம் சார், அந்த அளவு உள்ளே நடந்தது என்றார்.
ஆனால் வருத்தம் குறையாத கமல்ஹாசன் ‘இந்த தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்றும் கூறினார். அதற்கு மதுமிதா மனவருத்தத்துடன் சிரிப்பதுபோல் இருந்தது.
கடந்த வாரம் வரை மதுமிதா வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இது பார்வையாளர்கள் மட்டுமின்றி கமல்ஹாசனையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுவரை எந்தப் போட்டியாளர் வெளியேறியபோதும் கமல் ஹாசன் வருத்தப்பட்டதுபோலவோ, இந்த அளவு ஆறுதலான வார்த்தைகளையோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, காரணம் அவரின் போராட்டம் மிகச் சரியானது என்பது அனைவரும் அறிந்த்தே ஆகும்.
