சென்னை கலாக்ஷேத்ராவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த நிறுவனத்தில் பாலியல் தொல்லைகள் நடந்ததாக தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்த விவகாரத்தை என்சிடபிள்யூ டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தது. இதில் காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை.
மேலும் இவ்விவகாரம் என் கவனத்திற்கு வந்தவுடன், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு விவரம் பெற்றேன்.இதுகுறித்து மேலும் விவரம் அறிய வருவாய் கோட்ட அலுவலர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் அங்கு அனுப்பி, விசாரணை நடத்தப்பட்டது,” என்றார்.
நெல்லையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 5 கிளிகள் மீட்பு!
மேலும், மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.