ரயில்வேயில் தொடர்ந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு என்னவென்றால் துணை மருத்துவம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 1937 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியானது Dietician – 4 பேர், Staff Nurse – 1109 பேர், Dental Hygienist – 5 பேர், Dialysis Technician – 20 பேர், Extension Educator – 11 பேர், Health and Malaria Inspector Grade III – 289 பேர், Lab Superintendent Grade III – 25 பேர், Optometrist – 06 பேர், Perfusionist – 01 பேர், Physiotherapist – 21 பேர், Pharmacist Grade III – 277 பேர், Radiographer – 61 பேர், Speech Therapist – 01 பேர், Ecg Technician – 23 பேர், Lady Health Visitor – 02 பேர், Lab Assistant Grade III – 82 பேர் மொத்தம் 1937 காலியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களில் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்திற்கு 173 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைக்கான வயது 01.07.2019 அன்று 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட பணியில் சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு ரூ. 250 கட்டணம் போதுமானது.
கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மேலும் அதிகாரப்பூர்வ விவரங்களுக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினைப் பார்க்கவும்.
முழுமையான விவரங்களை அறிய http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf என்ற லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.