கடந்த சில நாட்களாவே தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2-வது நாளாக தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,680-ஆக நேற்று விற்பனை செய்யப்படது. தற்போது கிராமுக்கு ரூ. 17 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,697-ஆகவும், பவுனுக்கு ரூ. 37,576-க்கு விற்பனையாகிறது.
இதனை தொடர்ந்து தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,124-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் பவுனுக்கு ரூ. 152 அதிகரித்து ரூ.40,992 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிக்கைகள் நெருங்கி வரும் சூழலில் தற்போது சற்று அதிகரித்து காணப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.