Entertainment
இந்த வருடம் மட்டுமே வேண்டவே வேண்டாம்: ஜெயம் ரவி அறிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு கொண்டாட்டங்கள் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாட வேண்டாம் என நடிகர் ஜெயம்ரவி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்னும் ஒரு சில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர் நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்று மட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளை சிறப்பாக செய்கிறது
ஆனால் இந்த வருடம் உலகளாவிய கோரோனோ தொற்று காரணமாக நான் உங்களை விரும்பி கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை
கொண்டாட்டங்களுக்கு பதிலாக நான் எப்படி உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்கிறேனோ, அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என் மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த கொரனோ தொற்றை எதிர்த்து போராடி வெற்றி பெறுவோம்
இவ்வாறு நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

