தற்போது சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி மக்களிடையே மீண்டும் ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் ஆர்யா. ஏனென்றால் அவர் நடிப்பில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் ரசிகர்களுக்கு மிகுந்த இன்பத்தைக் கொடுத்து காணப்படுகிறது. மேலும் இதனால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வந்துள்ளார் நடிகர் ஆர்யா. இதன் மத்தியில் தற்போது நடிகர் ஆர்யா மீது அவதூறு வழக்குகள் காணப்பட்டு வருகின்றன.
அவர் மோசடி செய்ததாக அவரின் பெயரில் பலரும் பல கோடிக்கணக்கில் கைவசம் காட்டினர். இதுகுறித்து தற்போது சங்கர் ஜிவால் சில உத்தரவுகளை கூறியுள்ளார். அதன்படி பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா அல்ல என்று அவர் கூறியுள்ளார். அதன்படி ஜெர்மனியில் குடியேறிய பெண்ணை மோசடி செய்து ஏமாற்றியது நடிகர் ஆர்யா அல்ல என்று சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே அவரது தாயார் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்யாவுக்கு தொடர்பில்லை என்று தெரிந்த பிறகு அவரது பெயர் முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டது என்றும் சங்கர் ஜிவால் கூறியுள்ளார் .உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்ததற்காக நடிகர் ஆர்யா காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.