தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த தமிழில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இந்த திரைப்படம் மிகபெரிய வெற்றியை கண்டதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியத்தொடங்கின.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா படமானது வசூல் ரீதியில் மாஸ்காட்டியது. அதிலும் குறிப்பாக ‘ஏ சாமி ஏ சாமி’என்ற பாடல் இணையதளத்தில் பட்டைய கிளப்பியது.
இந்நிலையில் அனிமல் என்ற படத்தினை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக படக்குழுவினர் ராஷ்மிகாவை தேர்வு செய்தனர்.
இதற்காக ராஷ்மிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் ராஷ்மிகா 2 கோடி ருபாய் சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ‘ஊ சொல்றியா மாமா’ பாட்டுக்கு பாட்டுக்கு சமந்தா 5 கோடி சம்பளம் வாங்கியதால் அதனை ஏன் நான் பின்பற்ற கூடாது என இதற்கு ஒப்புக் கொண்டுவிட்டாராம்.